பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு,சிங்கள குடியேற்றங்களை நிறுத்தி,அரசியல் கைதிகளை விடுதலை செய் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணம் மற்றும், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணம் யாழ்பாணத்தை நோக்கி சென்றடையும்.
இந்த நடை பயணத்தில் அனைவரும் கலந்து கொண்டு தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழு கோரியுள்ளது.